இதில் பங்கேற்ற வெங்கடேசன் மைக் பிடித்து பக்தி பாடலை பாடினார். அப்போது மைக் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக பக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி