தூத்துக்குடி: அதிமுக சார்பில் சார்பில் இப்தார் விருந்து

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் விருந்து ஏராளமான இந்து கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என கலந்துகொண்டு நோன்பு திறந்தனர். இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான். கடந்த 2ம் தேதி இஸ்லாமிய மக்கள் நோன்பு துவங்கி வரும் 31ம் தேதி வரை அதாவது 30 நாட்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். 

இஸ்லாமியர்கள் நோன்பு சூரிய உதயத்திற்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடித்து மாலை நோன்பு திறப்பது வழக்கம். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ரமலான் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்துகொண்டு நோன்பு திறந்து வைத்தார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள், இந்து, கிறிஸ்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு நோன்பு திறந்தனர். பின்னர் உலக நன்மைக்காக சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி