கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக குலசேகரப்பட்டினத்தில் 63 மில்லிமீட்டர் மழையும் வைப்பார் பகுதியில் 50 மில்லிமீட்டர் மழையும் திருச்செந்தூரில் 44 மில்லி மீட்டர் மழையும் ஓட்டப்பிடாரத்தில் 40 மில்லிமீட்டர் மழையும் வேட நத்தத்தில் 38 மில்லி மீட்டர் மலையும் தூத்துக்குடியில் 27 மில்லிமீட்டர்மழையும் பதிவாகியுள்ளது மாவட்டம் முழுவதும் சுமார் 503. 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது சராசரியாக 26. 49. மீட்டர் மழை பதிவாகியுள்ளது
இந்த மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு குடிசை வீடுகள் இடிந்து சேதம் ஆகி உள்ளது.
கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் இந்த மழை காரணமாக குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.