தூத்துக்குடி: சிப்காட் அமைக்க விளைநிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது இதில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை ஆகிய பகுதிகளில் சுமார் 2500 விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்க விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இந்தப் பகுதியில் சிப்காட் அமைப்பதை கைவிட்டு, விவசாய நிலங்கள் இல்லாத தரிசு நிலப் பகுதியில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான தனியார் காற்றாலை நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் விவசாய நீர்வழிப்பாதைகள் மற்றும் நீர்நிலைகளைச் சேதப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு காற்றாலை நிறுவனங்களிடமிருந்து சமூக பாதுகாப்பு நிதியைப் பெற்று, சேதமான நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.

தொடர்புடைய செய்தி