இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஸ்ரீவைகுண்டம் புறவழிச்சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஸ்ரீவைகுண்டம் ஊருக்கு உள்ளே செல்லாமல் புறவழிச்சாலை வழியாக சென்ற ஒரு தனியார் பேருந்து மற்றும் ஐந்து அரசு பேருந்துகளின் டிரைவர்களை மடக்கிப் பிடித்து எச்சரிக்கை விடுத்ததுடன் ரூபாய் 60,000 அபராதம் விதித்தார்.
மேலும் இவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் பேருந்துகளின் பர்மிட்டும் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு ஊருக்குள் வராத அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.