தூத்துக்குடி: அரசு உயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் இழப்பீடு

தமிழ்நாடு கிராம வங்கி நாசரேத் கிளை சார்பில் அரசு உயிர் காப்பீடு திட்ட காசோலை வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் வாடிக்கையாளரான திருக்களூர் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (31) பிரதம மந்திரி காப்பீடு திட்டமான பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டத்தில் காப்பீடு செய்திருந்தார். 

இவர் கடந்த 28.03.2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது வாரிசுதாரரான தாயார் லட்சுமிக்கு காப்பீடு ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை வங்கி ஊழியர்கள் தாயார் லட்சுமியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் வங்கியின் நிதிசார் கல்வி மைய ஆலோசகர் முருகேசன் கலந்து கொண்டு அரசு உயிர் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு பற்றி அந்த பகுதி மக்களுக்கு எடுத்துரைத்தார். இதில் தமிழ்நாடு கிராம வங்கி நாசரேத் கிளை மேலாளர் நிறைமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்வேதா, டிவிஎஸ் வட்டார உதவியாளர்கள் அருள் ராமேஸ்வரி, கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி