மேலும் கட்டிடத்தில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்த நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் வீட்டை ரிப்பேர் செய்வதற்கான பணத்தை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்கடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தூத்துக்குடி மாவட்ட குறைதீர் ஆணைய தலைவர் திருநீலபிரசாத், உறுப்பினர்கள் ஆ. சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ஒப்பந்தகாரரின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோரிடமிருந்து பெற்ற தொகையான ரூ. 18 இலட்சத்து, 12ஆயிரத்து 396 ரூபாயை செலுத்த வேண்டுமென்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈட்டு போய் ஒரு இலட்சம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூபாய் 5, 000 ஆக மொத்தம் போய் 19லட்சத்து 17ஆயிரத்து 396 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.