இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி ஊராட்சியில் கூட்டாம்புளி கிராமத்தில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பான ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 988 நியாய விலைக் கடைகளில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 261 குடும்பக் கார்டுதாரர்கள், இலங்கைத் தமிழர்கள் 500 குடும்பங்கள் உள்ளிட்டவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கின. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.