இதையடுத்து பணத்திற்கு ஈடாக பேராசிரியை கீதாஞ்சலி, பின்தேதியிட்ட அளித்த வங்கி காசோலை, அவரது வங்கி கணக்கில் செலுத்திய போது போதிய பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து செக் மோசடி தொடர்பாக கீதாஞ்சலி மீது சாத்தான்குளம் நீதிமன்றத்தில் இஸ்ரவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வரதராஜன், செக் மோசடி தொடர்பாக கல்லூரி உதவி பேராசிரியை கீதாஞ்சலிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், கடன் தொகையை 2 மாத காலத்திற்குள் 9 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்