தூத்துக்குடி: மருத்துவமனையில் புகையிலை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

இதையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, நெஞ்சக நோய் பிரிவு தலைவர் சங்கமித்ரா, மனநல மருத்துவர் ஸ்ரீராம் உட்பட டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி