அப்போது பணப்பை காணாமல் போனதைத் தொடர்ந்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட மத்திய பாகம் போலீசார், தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைத் தேடியபோது, வீடியோவில் மஞ்சள் நிற சேலை மற்றும் மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்திருந்த பெண் எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஏபிசி மகாலட்சுமி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் ஏறி ஜெயராஜ் ரோட்டில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். இறங்கப் போகும் முன் அந்தப் பெண் அவரது மணிப்பர்சை திருடியது சிசிடிவி காட்சியில் தெரிந்தது. இந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர். மேலும், அந்த மணிப்பர்சில் 3,000 ரூபாய் பணம் மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்ததும் தெரிய வந்துள்ளது.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?