தூத்துக்குடி: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து சட்டக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் "குன்றென நிமிர்ந்துநில்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சட்டம் பயிலும் மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. 

சட்டக் கல்லூரி மாணவ மாணவியருடன் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவதி தலைமையில் பாராளுமன்ற திமுக குழுத்தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி