தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காக தாட்கோ மூலம் 3 மாதங்கள் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். உணவு சேவை–சூழலியல் சுற்றுலா, உயர்தொழில் நுட்ப AI, ஆடை வடிவமைப்பு மற்றும் அழகுக்கலை மேலாண்மை போன்ற பயிற்சிகள் இதில் அடங்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். தகுதியானவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.