அத்தொகை, குவாரி அமைந்துள்ள பஞ்சாயத்து பகுதியில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்படும். இந்த பிரிவில், கணக்கு அதிகாரியாக மறவன்மடம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (43), என்பவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர், ஜூலை 27ம் தேதிக்கு பின், பணிக்கு வரவில்லை.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு கனிம வளத்துறை உதவி இயக்குனர் பிரியா கடிதம் அனுப்பினார். '15 ஆண்டுகளாக பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர், திடீரென பணிக்கு வராததற்கு காரணம் ஏதும் உள்ளதா' என, ஆட்சியர் இளம்பகவத் கேள்வி எழுப்பி, தமிழ்செல்வி குறித்து முழு தகவலை தருமாறு உத்தரவிட்டார்.