தூத்துக்குடி: ரூ.72 லட்சம் மோசடி – தவெக நிர்வாகி கைது

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வீடு விற்பனை செய்வதாக கூறி ரூ. 72 லட்சம் மோசடி செய்த வழக்கில், த. வெ. க நகரச் செயலாளர் ராஜா கைது செய்யப்பட்டார். பிச்சிவிளை பகுதியைச் சேர்ந்த கோபியிடம் ரூ. 90 லட்சத்திற்கு வீடு விற்பனை ஒப்பந்தம் செய்து, முன்பணமாக ரூ. 72 லட்சம் பெற்ற பிறகு, பத்திரப்பதிவு செய்யாமல் ராஜா மற்றும் அவரது மனைவி தலைமறைவாகினர். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி