தூத்துக்குடி: பனைமரம் நடும்பணி.. மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!

தமிழக அரசின் மரமாக கருதப்படுவது பனைமரமாகும் பனை மரங்கள் அதிகம் நிறைந்த மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் இருந்தது ஆனால் தற்போது பனை மரங்கள் அதிக அளவு வெட்டப்பட்டதால் பனை மரங்கள் குறைந்து உள்ளது மேலும் பனை மரங்கள் எந்தவித இயற்கை பேரிடர்க்கும் ஆளாகாமல் பலன் தரும் மரமாகும் கடல் அரிப்பு மற்றும் வெள்ளத்தின் போது ஏற்படும் அரிப்புகளில் இருந்து கரைகள் பாதுகாக்கும் அரணாக செயல்படுகிறது மேலும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையிலும் செயல்படுகிறது மேலும் பனை மரத்தின் இலை முதல் படம் வரை அனைத்து பொருட்களுமே உணவு மற்றும் மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் உள்ள மரம் ஆகும்

இத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரங்களை தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பனை மர விதைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள வீகேன் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைந்து தூத்துக்குடி மாநகர சுற்றியுள்ள தருவைகுளம் திருச்செந்தூர் ரவுண்டானா அத்திமரப்பட்டி கோரம்பள்ளம் குளக்கரை பகுதி முள்ளக்காடு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 50 பனை மர விதைகள் நடப்பட்டுள்ளன

கோரம்பள்ளம் குளக்கரை பகுதியில் இந்த பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

தொடர்புடைய செய்தி