அதன்படி நேற்று காலை முதல் அவ்வப்போது லேசான மேகமூட்டம் வந்து சென்றது. மதியத்துக்கு பிறகு மேகமூட்டமாக காணப்பட்டது. சிறிது சாரல் மழை பெய்தது. மாலையில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டு இருந்தன. அந்த நேரத்தில் தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் கெபி அருகே உள்ள ஒரு பனைமரம் பாதியில் இருந்து முறிந்து அருகில் இருந்த மின்சார ஒயரில் விழுந்து, கெபியின் சுற்றுச்சுவரில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் மின்கம்பங்கள் சேதமடைந்து வயர்கள் துண்டிக்கப்பட்டதால், அந்தோணியார்புரத்தில் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
OPSஐ சேர்த்த ஸ்டாலின், மு.க.அழகிரியை சேர்க்காதது ஏன்?