அப்போது அவ்வழியாக வந்த லாரி, அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மரிய அன்பரசியை, அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்ஸி வழக்குப் பதிந்து, லாரி டிரைவர் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் மகன் உதயகுமார் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்