இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை ரூரல் டிஎஸ்பி சுகிர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சரவணன் தலையில் கட்டையால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்- கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு 2 மனைவியர் மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்