இந்த மாட்டு வண்டி போட்டியில் 40க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. ஆயிரவன்பட்டி முதல் கடம்பூர் சாலை வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி போட்டிகளை அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேச பாண்டியன், ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்கள். இந்த மாட்டு வண்டி போட்டிகளை சாலையில் ஓரத்தில் நின்ற பொதுமக்கள் பார்வையிட்டு மாட்டு வண்டி ஓட்டக்கூடிய சாரதிகளை உற்சாகப்படுத்தினார்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்