தூத்துக்குடி: தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் இயங்கி வரும் அழகர் பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் இமெயில் வந்துள்ளது. இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து எஸ்.ஐ. ரத்தினவேல் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பள்ளி 3 மணிக்கு விடுப்பட்டது. 

இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்குள் சென்று ஒவ்வொரு அறையாகத் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி