மேலும் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்து இறக்கும் பணியாளர்களுக்கு உரிய இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து இன்று (செப்.,24) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னா், அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் ஊராட்சி துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விடுமுறை நாள்களில் பணியாளா்களை பணிக்கு அழைத்து சிரமப்படுத்தக்கூடாது. முதல்வரின் காலை உணவு திட்டம் சம்பந்தமான பதிவேடுகளை சத்துணவு துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூலம் பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.