தூத்துக்குடி: 4 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைகூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. 2024-25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும் வென்றான் கிராம ஊராட்சி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டுடன்காடு கிராம ஊராட்சி, கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் விட்டிலாபுரம் கிராம ஊராட்சி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுக்குளம் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஜூன் 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை வட்டார வள பயிற்றுநர்கள் மற்றும் கிராம வள பயிற்றுநர்களால் சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கையினை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. 

கிராம சபை கூட்ட நடவடிக்கைகளை நிர்ணய் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும் வென்றானில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். இதில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் ஜெயராஜ் கலந்து கொண்டு சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக பொதுமக்களுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் சமூக தணிக்கை அறிக்கை மீது கிராம சபையில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி