இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மது பாட்டில்களை பத்து ரூபாய்க்கு திரும்பப் பெறும் நடவடிக்கை அமல்படுத்தி உள்ளது. இந்த மது பாட்டிலை பத்து ரூபாய்க்கு திரும்பப் பெறும் உத்தரவை தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வலியுறுத்தி சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் தனது கழுத்தில் காலி மதுபான பாட்டில்களை அணிந்தபடி வந்தும் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தான் உருவாக்கியுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பெட்டியை தள்ளியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்