தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரை கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதைத்தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குற்றவாளி ஆரோக்கியசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.