தூத்துக்குடி: கூடுதல் கட்டணம் 4 மினி பஸ்கள் மீது ஆர்டிஓ நடவடிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் ஓடும் மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா உத்தரவின் பேரில், சோதனை நடத்தப்பட்டது. அதில் 4 மினி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்புடைய செய்தி