அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தலைமையில் அதிமுகவினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு GO BACK முதல்வர் மு.க. ஸ்டாலின் - யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பி முழக்கமிட்டனர். இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ உள்பட 200க்கும் மேற்பட்டவர்களை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து