கோவில்பட்டி அருகே உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவு விபத்தில் தொழிலாளி பால்ராஜ் (58) உயிரிழந்தார். இதே விபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி உபேந்திர மஞ்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.