தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தாளவாய்புரம் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் முருகன் என்பவர் சரமாரியாக வெட்டப்பட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவரான மந்திரம் என்பவர் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.