3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், வனவிலங்கு ரோமத்தால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகத்துக்கிடமான பல்வேறு அளவுகளிலான 182 பிரஷ்களை கைப்பற்றினர். தொடர்ந்து, கடலையூர் கிராமத்தில் உள்ள பெயிண்டிங் பிரஷ் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அணில், கீரிப்பிள்ளை ஆகியவற்றின் ரோமங்களைப் பயன்படுத்தி ஓவியம் வரையும் பிரஷ்களை தயாரித்து விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சோதனை நடத்தி, சந்தேகத்துக்கிடமான 182 பிரஷ்களை பறிமுதல் செய்துள்ளோம். பெங்களூரு ஆய்வகத்துக்கு அனுப்பி, அறிக்கை கிடைத்ததும் அதன்டிப்படையில் வனப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்