இந்நிலையில், அவர் கள்ளக்குறிச்சியில் இருந்து கதிர் அடிக்கும் எந்திரத்தை வாடகைக்கு வரவழைத்து, அறுவடை பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த எந்திரத்தை கள்ளக்குறிச்சி புதுவீடுத் தெருவைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் அழகுவேல் (30) என்பவர் இயக்கி வந்தார். நேற்று (பிப்.18) மாலை 3 மணிக்கு கருப்பசாமி நிலத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணி நடந்தது. இந்த பணிகளை கருப்பசாமி மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது அழகுவேல் எந்திரத்தை பின்னோக்கி இயக்கி உள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக அங்கு நின்ற கருப்பசாமி மீது எந்திரம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கதிர் அடிக்கும் எந்திர டிரைவர் அழகுவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கருப்பசாமிக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், மதன் என்ற மகனும், ராமகமலம் என்கிற மகளும் உள்ளனர்.