இதை தடுக்க வந்த அவரது சகோதரர் செண்பகராஜுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. நேற்று முன்தினம் இரவில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் பிரகதீஸ்வரன் கொலை வழக்கில் கோவில்பட்டி செண்பகா நகரைச் சேர்ந்த சதீஷ் மாதவன் (26), செல்லத்துரை (26), விக்னேஷ் (24), மதன்குமார் (20), கனகராஜ் (24) அர்ஜுன் (24),சுரேஷ் (24) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.