தூத்துக்குடி: பொதுமக்களை திரட்டி போராட்டம்; சிபிஎம் அறிவிப்பு

தூத்துக்குடி அருகே உள்ள கோமஸ்புரம் பகுதியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு குடியிருப்புகள் கட்டப்பட்டு அந்த குடியிருப்புகளில் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு ரூபாய் 41,000 பெற்றுக்கொண்டு வீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் குடிசைமாற்று வாரியம் முறையாக ஆண்டுதோறும் பராமரிப்பு மேற்கொள்ளப்படாததால் வீடுகள் சேதமடைந்து வருகிறது. வீடுகளில் மேற்கூரை இடிந்து விழுந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் தலையில் காயம் அடைந்தார். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குடிசைமாற்று வாரியம் புதிய குடியிருப்புகளை அருகே கட்டி அதில் அவர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். அதன் பின்பு இந்த வீடுகளை காலிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இந்த வீடுகளை முறையாக குடிசைமாற்று வாரியம் பராமரித்து பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்தப் பகுதி பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி