தர்மராஜ்க்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் நிறைமாத கர்ப்பிணியாக அவரது மனைவி உள்ளார். இதைத்தொடர்ந்து தர்மராஜை இழந்து வாடும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை இன்று தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவரது 5வது வயது பெண் குழந்தையின் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான அனைத்து செலவுகளையும் ஏற்று அந்தக் குழந்தையை படிக்க வைப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக அந்தக் குழந்தைக்கான கல்விக் கட்டணத்தை பள்ளிக்கு நேரடியாக சென்று தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் ரூபாய் 20 ஆயிரத்தை செலுத்தினார்.