நாலாட்டின்புதூர் அருகே ஊத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (35), தனது குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு மனைவி கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.