தூத்துக்குடி: உலக நிவாரணி மஹா யாகம் திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மங்கி தோப்பு சாலை அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமும் டிரஸ்ட் சார்பில் நான்காம் ஆண்டு ஸ்ரீ ஐயப்பன் உலக நிவாரணி மகா யாகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்பனுக்கு பால், தயிர், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள், தீபா ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி