கோவில்பட்டி: காரில் கடத்திய 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டி அருகே ஆம்னி காரில் கடத்திய 900 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து கயத்தாருக்கு கிளவிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தலைமையில் தனிப் பிரிவு போலீசார் கிளவிப்பட்டி பகுதிக்குச் சென்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டபோது காரில் 900 கிலோ ரேஷன் இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த டிரைவர் அய்யனார் ஊத்து கிணற்றுத் தெருவைச் சேர்ந்த மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், காருடன், அரிசி மற்றும் டிரைவர் மணிகண்டனை தூத்துக்குடி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அரிகண்ணனிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை (40) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி