கோவில்பட்டி: சட்ட விரோத மது விற்பனை.. 9 பேர் கைது

கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் உத்தரவின்பேரில், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் மணிமாறன், செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி-கடலையூர் சாலை, எட்டயபுரம் சாலையில் மூக்கரை விநாயகர் கோவில் பகுதி, மந்திதோப்பு சாலையில் உள்ள மயானப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. 

இதுதொடர்பாக, கோவில்பட்டி வள்ளுவர் நகர் 4-ஆவது தெருவை சேர்ந்த வினோத்குமார் (20), சுப்பிரமணியபுரம் 6-ஆவது தெருவை சேர்ந்த மு. விஜயகுமார் (31), சாஸ்திரி நகரை சேர்ந்த மூ. ரமேஷ் கிருஷ்ணன் (39), பாரதி நகர் 2-ஆவது தெருவை சேர்ந்த பூ. முருகன் (59), கயத்தாறு கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மு. ஜெயராமன் (33), ஆத்திகுளம் மேல தெருவை சேர்ந்த சௌ. காளிராஜன் (44), சிதம்பரம் பட்டி நடுத்தெருவை சேர்ந்த து. மாரிமுத்து (42), கே. கரிசல்குளம் வடக்கு தெருவை சேர்ந்த க. மாடசாமி (60), கழுகுமலை கம்பவுண்டர் தெருவை சேர்ந்த கணேசன் (59) ஆகிய 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி