கடலூர்: இறந்து கிடந்த பச்சிளம் பெண் சிசு உடல்.. பரபரப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியின் அருகே நேற்று (டிசம்பர் 29) மதியம் பிறந்து ஒரே நாளான பச்சிளம் பெண் சிசு உடல் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கல்லூரி ஊழியர்கள் இதுபற்றி ராமநத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் கிடந்த பச்சிளம் பெண் சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பச்சிளம் பெண் சிசுவின் உடலை பெண்கள் விடுதி அருகே போட்டுச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? எனவும் அந்த குழந்தை காதல் விவகாரத்தில் பிறந்ததா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதி கட்டிடத்தின் அருகே பச்சிளம் பெண் சிசு உடல் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி