ஆடுதுறை: ரேஷன் அரிசியை கடத்திய மூன்று பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, ஆடுதுறை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு முன்பு ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய, லாரியில் அரிசி மூட்டைகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.

ஆவணியாபுரம் முகமது பைசல் (23), திருபுவனம் சுபாஷ் (33), சூரியனார்கோயில் கண்ணதாசன் (33) ஆகிய மூன்று பேரும் லாரியிலிருந்து 50 கிலோ எடையுள்ள 50 மூட்டைகளை ஆட்டோவிலும் இருசக்கர வாகனத்திலும் ஏற்றிக்கொண்டு இருந்தபொழுது, திருவிடைமருதூர் சோசியல் டீம் காவல்துறையினர் பிடித்து திருவிடைமருதூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். மூவரையும் கைது செய்து சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி