மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது ‘போக்சோ’ வழக்கு

திருவிடைமருதூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

திருவிடைமருதூா் அருகே உள்ள குறிச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவா் செல்லையன். இவா் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை(செப்.30) புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் சனிக்கிழமை போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து தலைமறைவான தமிழாசிரியா் செல்லையனை தேடி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி