அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி கைது

நாச்சியார் கோயில் அருகே உள்ளது கொத்தங்குடி பிள்ளையார் கோயில் தெருவைச்சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவருக்கு மனோகரன் (43) கமல்ஹாசன் (34) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மனோகரன் திருமணம் முடித்து 2 குழந்தைகள் உள்ளனர், கணவன் மனைவி கருத்து வேறுபாடால் மனைவி அவரது தாயார் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து சென்று விட்டார். கமல்ஹாசனுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் செப். 27 இல் அண்ணன் தம்பி இருவரும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கமல்ஹாசன் மனோகரனை கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மனோகரனை உறவினர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செப். 29 இல் மனோகரன் உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் நாச்சியார் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் வழக்கு பதிந்து, இறந்த மனோகரனை உடற்கூறாய்வுக்கு அனுப்பி கமலஹாசனை திங்கள்கிழமை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

தொடர்புடைய செய்தி