திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் கோவில் தீமிதி

திருத்துறைப்பூண்டி ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலய 81ஆம் ஆண்டு பங்குனி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

திருத்துறைப்பூண்டி நகரில் ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தில் 81ஆம் ஆண்டு பங்குனி மாத தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஒரு வாரகாலம் விரதம் இருந்த பக்தர்கள் இன்று தங்கள் வேண்டுதல் நிறைவேறவேண்டி காலை முதலே பால்குடங்கள், காவடிகள் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் ஆலயம் எதிரே வளர்க்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். 

ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறவேண்டி பால்குடங்களுடனும், கைக்குழந்தைகளுடனும், அழகுகாவடி, மயில்காவடிகளுடனும் தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறையினர் மற்றும் கோயில் செயலாளர் முருகையன், கோயில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர், கோயில் நிர்வாகிகள், மருளாளிகள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ முள்ளாட்சி மாரியம்மன் ஆலய பங்குனி 81ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி