திருவாரூர்: கூரை வீடு எரிந்து 2 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ஒரத்தூர் கீழத்தெருவில் சந்திரா வீட்டில் சமையல் செய்யும்போது கூரையில் தீப்பிடித்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். குடிநீர் குழாய் மற்றும் குளத்து நீரைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். இருப்பினும், நான்கு கிராம் தங்கம், பத்தாயிரம் ரூபாய் பணம், ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து திருக்களர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி