திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையால், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை அருகே மேலமருதூர், எழிலூர், பிச்சன்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 20 நாட்கள் ஆன சம்பா தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.