திருவாரூர்: மனைவியிடம் தவறாக நடக்கும் முயன்றவர் கொலை.. வாலிபர் கைது

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அருகே கர்ணாவூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அருள்தாஸ், தனது வீட்டின் எதிரே இறந்து கிடந்தார். இது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த கலையரசன் என்பவரின் மனைவியிடம் அருள்தாஸ் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் ஆத்திரமடைந்த கலையரசன், இருப்பு கம்பியால் அருள்தாஸை தாக்கி கொலை செய்துவிட்டு, அவரது உடலை அருள்தாஸின் வீட்டிற்கு எதிரே வீசிவிட்டுச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி