இந்நிலையில் கடந்த இருபதாம் தேதி அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் இருந்த ரூ.20,000 மதிப்புள்ள உண்டியல் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணிக்கை பணமாக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.