இதுதொடர்பாக, காரை ஓட்டிவந்த புதுப்பட்டினம் வெள்ளக்குளத்தை சேர்ந்த சண்முகத்தை (39) கைது செய்தனர். தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த கார்கள் போலீசாரை பார்த்ததும் தப்பினர். எனினும் போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், காரைக்கால் பகுதியை சேர்ந்த சுபாஷ் (28), பிரபாகரன் (33), சுகுமார்(46), முஜிபுர்ரஹ்மான் (46), முருகன் (44) உள்ளிட்டோரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய 3 சொகுசுகார்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1,548 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.