ஒரத்தநாடு: கடையில் கைவரிசை காட்டிய முதியவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஒரத்தநாடு கடைத்தெருவில் உள்ள ஒரு தனியார் பால் கடையில் கடந்த மாதம் நள்ளிரவில் கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடி சென்றார். இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது (வயது 62) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கடையில் பணத்தை திருடியது அவர்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சாகுல் ஹமீதை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு வேறு ஏதேனும் குற்ற செயல்களில் தொடர்புடையவரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி