திருவாரூர்: மனநலம் பாதித்த பெண்ணை சீரழித்த இளைஞர் தலைமறைவு

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பாடகச்சேரி, சொரக்குடி பகுதியில் வசிக்கும் ரமேஷ் - பூங்கொடி தம்பதியருக்கு 20 வயது மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை, மேலும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில், அதே பகுதியைச் சார்ந்த சங்கர் என்பவரின் மகன் கேசவன் என்பவர், இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஆறுமுறை பாலியல் ரீதியாக உறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனை அறிந்த இளம் பெண்ணின் தாயான பூங்கொடி வலங்கைமான் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வலங்கைமான் காவல்துறையினர் கேசவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், கேசவன் தலைமறைவாகியுள்ளார். வலங்கைமான் காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள கேசவனை வலைவீசி தேடிவருகின்றனர். 

தொடர்ந்து திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாக உள்ளதால் பாலியல் ரீதியான குற்றங்கள் தினம்தோறும் அதிக அளவில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை அடைகின்றனர்.

தொடர்புடைய செய்தி